Monday, April 02, 2012

காசியின் சிறப்பு :

காசியின் சிறப்பு :
  மாடு முட்டாது
 பல்லி கத்தாது
  கருடன் பறக்காது 
  பூ மணக்காது 
 பிணம் நாறாது

Labels:

Sunday, April 01, 2012

காசியின் சிறப்பு :

காசியின் பிற பெயர்கள்:[காசி / வாரணாசி/பனாரஸ்]
காசியின் சிறப்பு :
  மாடு முட்டாது
 கருடன் பறக்காது 
  பூ மணக்காது 
 பிணம் நாறாது 

Labels:

Tuesday, March 27, 2012

மீனாட்சி

 மீனாட்சி என்றால் என்ன என்று சொல்கிறார். மீன்விழி என்றால் மீனின் விளிம்புவடிவம்போல கண்ணுடையவள் என்றுதான் பொருள் சொல்கிறார்கள், அதைவிட முக்கியமான பொருள் உண்டு என்கிறார். மீன் கண்களை இமைப்பதில்லை. இறைவியும் இமையாவிழிகொண்டவள் என்பதனால்தான் அவளுக்கு மீனாட்சி என்று பெயர். கைக்குழந்தையை வைத்திருக்கும் அன்னை ஒரு கணமேனும் கண்மூடுவதில்லை. கண்ணை மூடினால் அவள் அகக்கண் பலமடங்கு கூர்மையுடன் திறந்திருக்கும். இந்தப்பிரபஞ்சம் சக்தியின் மடியில் கிடக்கும் கைக்குழந்தை– என்று அவர் சொல்லியிருந்தார்.-சந்திரசேகர சரஸ்வதி

Labels:

Tuesday, March 13, 2012

சாந்தம்

ஒருவன் இறந்த பிறகு அவன் பிணத்தில் எத்தனை வண்டிகள் ஏறிச் சென்றாலும் அந்த உயிருக்கு எப்படி அதில் வருத்தமில்லையோ, அதுபோல, 'நமதல்ல' என்று ஒதுங்கிய இந்த உடலும் உள்ளமும் இந்த உலகத்தாரின் உபகாரத்தின் பொருட்டு எவ்வளவு வருந்தினாலும், அதில், அவ்வுடம்புக்கும் உள்ளத்துக்கும் உரியவனாகிய ஞானிக்குச் சிறிதும் கவலையில்லை. அவன் உழைப்புக்கு அஞ்சான். துன்பத்துக்கும் அஞ்சான். இவ்வளவு தைரியத்தையும் குளிர்ச்சியையும் கொடுப்பது, உண்மையுணர்ச்சியாகிய சாந்தம்.

சாந்தம் என்பது பார்த்தால் ஏழை போல் இருக்கும்; அதாவது சக்தி அற்றதுபோல் இருக்கும். அது செய்யும் வேலை எதுவும் செய்யாது. அதற்கு உள்ள பிடிவாதமும் தைரியமும் எதற்கும் இருக்காது. சர்வ சித்திகளும் இதனாலே அடையப்படுவனவாம். ரமணர்

Labels:

மனம்

மயக்கம், அதிகமான மகிழ்ச்சி அல்லது அதிகமான துக்கம், அச்சம் போன்றவற்றால் எண்ணங்கள் வலுக்கட்டாயமாக நிறுத்தப் பெறும்போது மனம் தன் மூலமாகிய இதயத்திற்குச் செல்கிறது.

மனம் அலையும்போது சக்தி சிதறிப்போய் பலவீனம் அடைந்துவிடுகிறது. மனம் அலையாமல் ஒரே எண்ணத்துடன் இருக்கும்போது, சக்தி சேமிக்கப்படுகிறது. இதன் காரணமாக மனம் வலிமை பெறுகிறது.

அகந்தை இருக்கும் வரைதான் தியானம் தேவை. அகந்தையின் மூலகாரணத்தைத் தேடும்போது அதன்மீது வெறுப்பு தோன்றி மறைகிறது. எஞ்சி நிற்பது ஆத்மா மட்டுமேயாகும்.

மனத்தை உள்நோக்கிச் செலுத்துவதில் வெற்றி பெறுவதென்பது பயிற்சியாலும் வைராக்கியத்தாலும் கிட்டுவதாகும். அது படிப்படியாக வெற்றி தரும்.-ரமணர்

Labels:

மகிழ்ச்சி

 உயிர்களில் ஏதாவது ஒன்றுக்காவது மகிழ்ச்சியைக் கொடுக்க முடியுமானால், வாழ்க்கையின் லட்சியம் நிறைவேறிவிட்டது என்று பொருள்.
* குணத்தையோ, குற்றத்தையோ எங்கு விவாதித்தாலும் அங்கே இருக்கும் ஒவ்வொருவருக்கும் அதில் சிறிதளவாவது பங்கு வந்து சேர்ந்துவிடும்.
* எதையாவது அறிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டால், தனியான இடத்தில் தங்கிக் கண்ணீர் மல்க, இறைவனை வேண்டுங்கள், அவன் உங்கள் மனத்திலுள்ள அழுக்கையும், துயரத்தையும் போக்குவான்.-- சாரதாதேவியார்
From Dinamalar.com

Labels:

Monday, February 27, 2012

கண்

காற்றுக்கு கண் இல்லை என்பதால் தான் அது எதன்மீதும் மோதுகிறது, குயிலுக்கு நிறைய பாடல்களை பாட வேண்டும் என்ற பேராசை அதனால் தான் சின்னஞ்சிறு பாடல்களாக எப்போதும் பாடிக்கொண்டிருக்கிறது

Labels:

Sunday, February 26, 2012

மரியாதை

முப்பது ரூபா திருடினt தெருவில விட்டு நாயடி பேயடி அடிப்பாங்க... முப்பது லட்சம்னt என்கௌன்ட்டர் செய்வாங்க. முப்பது கோடின்ன மாலை மரியாதை செய்வாங்க. முன்னூறு கோடின்ன மந்திரி பதவி தருவாங்க.. மூவாயிரம் கோடின்ன போர்ப்ஸ் பத்திரிகையிலே பெயர வெளியிடுவாங்க...

Labels:

Friday, February 24, 2012

சமத்துவவாதி

மரணம் போன்ற சமத்துவவாதியை யாராலும் காண்பதரிது. இருப்பவன்-இல்லாதவன், உயர்ந்தவன்-தாழ்ந்தவன், ஆள்பவன்-ஆண்டி போன்ற பேதங்கள் எல்லாம் மரணத்திடம் இல்லை. எல்லோரையும் அது பேதமின்றி அது கண்டிப்பாக அணுகுகிறது.

Labels:

மனிதன்

"மனிதன் ஞானத்தை உருவாக்குகிறான், அது கூன்போல அவன் முதுகில் உட்கார்ந்திருக்கிறது. தள்ளாடியபடி அதைச் சுமந்து திரிகிறான்" - விஷ்ணுபுரம், ஜெயமோகன்.

Labels:

Monday, January 02, 2012

வெற்றி

ஆரம்பித்தால் அரை வெற்றி, தொடர்ந்தால் முக்கால் வெற்றி, முடிந்தால் முழு வெற்றி.
முடியாது என்று நீ சொல்வதை எல்லாம், யாரோ ஒருவன், எங்கோ செய்து கொண்டிருக்கிறான்.
லட்சியம், திட்டம், உழைப்பு, விடா முயற்சி இவையே வெற்றி மாளிகையின் நான்கு தூண்கள்.
நேரம் நிற்பதில்லை; காலம் காத்திருப்பதில்லை. நீ நிற்கிறாய். காத்திருக்கிறாய். காலத்தை இழக்கிறாய். கண்ணைத் திற
ஒவ்வொரு துயரத்திற்கும் உட்கார்ந்து நீ ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கும் நேரங்களில், வெற்றி தேவதை உன்னை விட்டு வெகுதூரம் விலகிப் போகிறாள்.

Labels:

Tuesday, December 27, 2011

இலக்கியம்

இலக்கியம் புரிவதற்கு பெரிய தகுதி என ஏதுமில்லை. அடிப்படை மொழியறிவு. வாசித்தவற்றை சொந்த வாழ்க்கையுடன் எங்கோ ஓர் இடத்தில் கற்பனைசெய்து இணைத்துக்கொள்ளும் தன்மை இரண்டும் இருந்தால் போதும். ஓராண்டு தொடர்ந்து வாசிக்கும் எவருக்கும் இலக்கியம் திறந்துகொள்ளும்

Labels:

Monday, December 26, 2011

தாமஸ் கார்லைல்

நம்முடைய முக்கிய வேலை தூரத்தில் மங்கலாகத் தெரிவது என்ன என்பதைத் தெரிந்து கொள்வதல்ல, நம் முன்னால் இருப்பது என்ன என்று தெரிந்து அதை சிறப்பாகச் செய்வது தான்- தாமஸ் கார்லைல்

Labels:

எதிர்காலம்

இருட்டில் ஒரு நெடும்பயணம் காரில் போக வேண்டி இருப்பதாக வைத்துக் கொள்வோம். அத்தனை தூரமும் தெருவிளக்குகள் இருந்தாக வேண்டும் என்பதில்லை. காரின் முன் விளக்குகள் சரியாக எரிந்தால் போதும். அத்தனை தூரத்தையும் சிரமம் இல்லாமல் கடந்து விடலாம். காரின் முன் விளக்குகளால் சில அடி தூரம் தான் வெளிச்சம் தர முடியும் என்பதால் பயணக்கடைசி வரை தெருவிளக்கு எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்ற கோரிக்கை எப்படி நகைப்பிற்கிடமாகுமோ, அப்படித்தான் எதிர்காலம் முழுவதற்கும் தயார்படுத்திக் கொள்வதும்.

Labels:

இன்று...

"நேற்று என்பது வெறும் கனவு
 நாளை என்பதோ கற்பனை மட்டுமே
 இன்று சிறப்பாக வாழ்ந்தால்
 அது நேற்றைய கனவையும் இனிமையாக்கும்
 நாளைய தினத்தையும் நம்பிக்கைக்குரியதாக்கும்
 அதனால் இன்றைய தினத்தைக் கவனி
 அதில் தான் விடியலுக்கான தீர்வே உள்ளது"

Labels:

Monday, November 28, 2011

பால்கனி நிலவு

கவிதை:

அவ்வீட்டில்

திருடன் விட்டுச்சென்றது

பால்கனி நிலவு மட்டுமே.

ஒன்றுமில்லாத பாஷோவின் வீட்டில் எதைத் திருட திருடன் வந்தான் என்று தெரியவில்லை. இடிந்துபோன பாஷோவின் வீட்டில் திருட முடியாத நிலவு மட்டுமே இருக்கிறது. ஒன்றும் கிடைக்காத திருடன் பாஷோவிடம் திருட முடியாத நிலவு மட்டுமே உள்ளதைத் தெரிந்து நொந்துபோயிருப்பான் - S.Ramakrishnan

Labels:

Sunday, November 13, 2011

திரு.வி.க.,

தமிழ்த் தென்றல் திரு.வி.க., ஒருமுறை காரைக்குடி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் மன்றத்திற்குத் தலைமை உரை நிகழ்த்த சென்ற நேரத்தில், அந்த உயர்நிலைப் பள்ளி பெண்கள் திரு.வி.க.,வை கண்டதும், "திரு.வி.க., வாழ்க... திரு.வி.க., வாழ்க!' என வாழ்த்தொலி எழுப்பி, ஆரவாரத்துடன் வரவேற்றனர். மேடையில் திரு.வி.க., பேசத் துவங்கியதும், "எனக்கு ஜோதிடன் செவ்வாய் தோஷம் உள்ளது என்றான். இத்தனை செவ்வாய்கள் என்னை வாழ்த்தும் போது, அந்த ஒரு செவ்வாய் என்னை என்ன செய்து விடும்?' என்றார்

Labels:

பீஷ்மர்

காசிராஜனின் புதல்விகள் அம்பை, அம்பிகை, அம்பாலிகை ஆகியோர் அழகு, குணம், அறிவு நிரம்பிய கன்னிகைகள், அவர்களுக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்தார், காசிராஜன்.
பலநாட்டு ராஜகுமாரர்கள் வந்தனர். அஸ்தினாபுரத்தை ஆண்டு வந்த விசித்திர வீர்யனுக்காக (சந்தானுவின் மகன்) சுயம்வரத்துக்கு வந்தார் பீஷ்மர்.
அங்கு வந்திருந்த, பல நாட்டு இளவரசன்களும், வயதான பீஷ்மரை ஏளனமாகப் பேசிச் சிரித்தனர்; அதனால், சினம் கொண்டார். அந்த ராஜகுமாரன்களோடு போரிட்டு வென்று, காசிநாதனின் மூன்று கன்னியரையும் தேரில் ஏற்றி, அஸ்தினாபுரம் திரும்பினார்.
சால்வ மன்னன் மீது, அம்பைக்கு ஆசை. அவள் பீஷ்மரிடம் சென்று, "நான் சுயம்வரத்திற்கு வந்திருந்த சால்வ மன்னனை மணக்க விரும்புகிறேன்...' என்றான். அவள் விருப்பப்படியே அவளை சால்வே மன்னனிடம் அனுப்பி வைத்தார் பீஷ்மர்.
அம்பையைக் கண்ட சால்வனோ, "பீஷ்மரால் தூக்கிச் செல்லப்பட்டு திரும்பிய உன் தூய்மையை நான் நம்புவதற்கில்லை...' எனக் கூறி, அவளை மணக்க மறுத்து விட்டான்.
அம்பை மீண்டும் அஸ்தினாபுரத்துக்கு வந்தாள். "சால்வ மன்னன் மீது உனக்கு மனதளவில் காதல். அதனால், உன்னை நானும் மணக்க முடியாது...' என, விசித்திர வீர்யனும் உறுதியாகக் கூறி விட்டான்.
அம்பை மீண்டும் சால்வனைத் தேடிப் போனாள். விரட்டப்பட்டு, பீஷ்மரிடமே திரும்பி வந்தாள்.
"தங்களால் தான் எனக்கு இத்தகைய நிலை. நீங்கள் தான் என்னை மணந்து கொள்ள வேண்டும்...' என, பீஷ்மரிடம் கேட்டாள் அம்பை.
"நான் வாழ்வில் திருமணமே செய்து கொள்வதில்லை என சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன்; அதை மீற முடியாது...' எனக் கூறி, அம்பையின் வேண்டுகோளை மறுத்து விட்டார் பீஷ்மர்.
அஸ்தினாபுரத்திற்கும், சால்வ மன்னன் நாட்டிற்கும் பல முறை சென்று திரும்பிய அம்பை, பீஷ்மர் மீது மிகுந்த சினம் கொண்டாள். பீஷ்மரைக் கொல்ல வேண்டும் என தவம் மேற்கொண்டாள். அவள் தவத்தை மெச்சி பரமேஸ்வரன் அவள் முன் தோன்றி, "மறுபிறவியில் நீ பீஷ்மரைக் கொல்வாய்...' என அருளினார்.
உடனே, விரைவில் மறுபிறவி எடுக்க விரும்பி அம்பை நெருப்பினுள் குதித்தாள்.
துருபதனின் மகளாக, "சிகண்டினி'யாகப் பிறந்து, பின்பு, "சிகண்டி' (அரவாணி) ஆகி, மகாபாரதப் போரில், 10ம் நாள் யுத்தத்தில் பீஷ்மரை கொன்றாள்.

Labels:

Tuesday, November 08, 2011

எது மேலான தானம்?

ஆறில் ஒரு பங்கு' என்ற சொற்றொடர் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒருவனுடைய வருமானத்தில் ஆறில் ஒரு பங்கைத்தான் தனக்கென்று வைத்துக்கொள்ள வேண்டும். மீதியில் ஒரு பங்கு பெற்றோர்களுக்கு,
இரண்டாவது பங்கு பித்ருக்களுக்கு (இறந்து போனவர்கள் நினைவாக),
மூன்றாவது பங்கு சமூகத்திற்கு (community), நான்காவது பங்கு அரசருக்கு அதாவது அரசாங்கத்திற்கு வரியாக (16% வரி எவ்வளவு நியாயமானது. கறுப்புப் பணத்திற்கு அவசியம் இருந்திருக்காதே). கடைசிப் பங்கு தான தர்மங்களுக்கு என்று பழைய நூல்கள் சொல்கின்றன. தானம் என்னென்ன? எது உயர்ந்த தானம்?
யாருக்குக் கொடுக்க வேண்டும்? எப்படிக் கொடுக்க வேண்டும்? தானத்தில் எத்தனையோ வகை உண்டு.

பொருள் தானம், வஸ்த்ர தானம் (உடை)
அன்ன தானம் (சாப்பாடு), பூதானம் (நிலம்),
கன்னிகா தானம் (கல்யாணம்), வித்யா தானம் (படிப்பு),
கோ தானம் (பசு). இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

இதில் எது உயர்ந்தது?
எல்லா தானங்களிலும் மிகச் சிறந்த தானம் அன்ன தானம்தான். ஏன்?

மற்ற எல்லா வித தானங்களிலும் தானம் பெறுபவருக்கு 'போதும்' என்ற திருப்தி
ஏற்படுவதில்லை. 10 ரூபாய் கொடுத்தால், 20 ரூபாய் கொடுத்திருக்கக் கூடாதா என்ற நினைப்பு வரும். ஆடைகள் கொடுத்தால், இதைவிட நல்ல ஆடைகள்
தரக் கூடாதா என்று நினைப்பார்கள். இதே மாதிரி மற்ற தானங்களிலும் ஏற்படும்.
ஆனால் ஒருவருக்குச் சாப்பாடு போட்டால், அவர் வயிறு நிறைந்துவிட்ட பிறகு மேலே ஒரு கரண்டி அன்னம் அளித்தாலும் கையை வைத்துத் தடுத்து "போதும், போதும்" என்று கூறுவார்கள். மேலும் வாயார வாழ்த்தவும் செய்வார்கள்.

எது மேலான தானம்?
எதனால் அதிக நன்மை கிடைக்கும்?

தானம் பெறத் தக்கவனை அணுகி தானம் செய்தல் மேலானது. உத்தமம். ஒருவரை அழைத்து தானம்செய்வது மத்திமம். யாசிப்பவனுக்கு தானம்செய்வது, மட்டமானது. சேவைசெய்தவனுக்கு கொடுத்த தானமோ பயனற்றது.

தானம் பெறத் தக்கவரின் இருப்பிடம் சென்று யாதொரு தானம் டுக்கப்படுகிறதோ
அது அளவற்ற பயனைத் தரும்.


மைமோனிடீஸ் (Maimonidies – வைத்தியர், தத்துவ ஞானி (1135 – 1204) யூத மதத்தைச் சேர்ந்தவர்) ஒரு கட்டுரையில் தானத்தின் எட்டு படிகளைப்
பற்றி விளக்குகிறார். தானத்தின் எட்டு படிகள் — கீழேயிருந்து

முதல் படி -மனத்திற்குப் பிடிக்காமலோ, மன வருத்தத்தோடோ கொடுப்பது. '
இந்த தானம் கையால் கொடுக்கும் தானம். இருதயத்திலிருந்து வரும் தானம் அல்ல.'

2ஆவது படி -சந்தோஷத்தோடு, ஆனால் கேட்பவர் தேவைக்குக்குறைவாகக்
கொடுக்கும் தானம்.

3ஆவது படி -சந்தோஷமாகவும், தேவையைப் பூர்த்திசெய்யும் வண்ணம ஆனால் கேட்ட பிறகு கொடுக்கும் தானம்.

4ஆவது படி -சந்தோஷமாகவும், கேட்காமலேயே தேவைக்கேற்ற தானத்தை தானம் பெறுபவர் கையில் கொடுத்து அவரை வெட்கப்படும்படி
செய்யும் தானம்.

5ஆவது படி- யாருக்காக தானம் கொடுக்கப்பட்டது என்ற தெரியாமலேயே தானம் செய்வது. முன்னோர்களில் சிலர் தங்கள் வீட்டு முற்றங்களில்
பண மூட்டைகளை தொங்கவிடுவார்களாம். பணம் தேவையுள்ளவர்கள் கொடுத்தவருக்குத் தெரியாமலேயே எடுத்துச் செல்வார்களாம்.

6ஆவது படி -தானம் கொடுத்தவரின் பெயர் விளம்பரப்படுத்தாமலேயே கொடுக்கப்படும் தானம். முந்தைய காலத்தில் சில நல்லவர்கள்
யாருக்கு உதவி தேவையோ அவர்கள் வீட்டுக்கு தானப் பொருள்களை அனுப்புவது உண்டு. யார் அனுப்பினர் என்பது பெறுபவருக்குத் தெரியாது.

7ஆவது படி -கொடுப்பவருக்கும் யாருக்கு கொடுக்கிறோம் என்று தெரியாது. வாங்கியவருக்கும் யாரிடமிருந்து வந்தது என்றுதெரியாது. இந்த தானம் சிறந்தது.
ஒரு பொது இடத்தில் (உதாரணம் கோவிலில் ஒரு அறை)
தானப் பொருள் கொடுக்கப்படும். வேண்டியவர்களுக்குத் தகுதிக்கு ஏற்றபட
விநியோகிக்கப்படும்.

8ஆவது படி -எல்லாவற்றிற்க்கும் மேலான உயர்ந்த தானம், ஏழ்மையை ஒழிக்கும் முயற்சிகள். "Do not give a person a fish a day. But teach him how to fish."
"ஒரு மனிதனுக்கு தினந்தோறும் ஒரு மீனை தானமாகக் கொடுக்காதே. அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக்கொடுத்துச் சொந்தக் காலில் நிற்க வை"
என்ற பழமொழிக்கு ஏற்றவாறு தேவை என்று வருகிறவர்களுக்கு ஒரு தொழிலையோ, வியாபாரத்தையோ கற்றுக்கொள்ள வசதிகள் செய்வது
மிகப் பெரிய தானம். இந்த தானம்தான் அவர்களை மற்றவர்களிடம்
கை ஏந்தி நிற்காத நல்ல தன்மானமுள்ள மனிதர்களாக மாற்றும்.

இப்படி வெவ்வேறு விதமான தானங்கள் செய்து வழிகாட்டிகளாக இருந்த எத்தனையோ மகான்கள், பெரியோர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களுடைய கதைகள் அடிக்கடி சொல்லப்படுகின்றன.

Labels:

Monday, October 17, 2011

அப்துல் கலாம்

உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் பறக்க வேண்டுமென்ற உணர்வு இருக்க வேண்டும். வாழ்வில் பெரிய லட்சியத்தை அடைய அது வழிவகுக்கும். நீ யாராக இருந்தாலும், எந்த கிராமத்தில் இருந்தாலும், உன்னால் வெற்றியடைய முடியும். நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும், உழைப்பால் அதை ஒரு நாள் அடைய முடியும்.எண்ணங்கள் பெரிதாக இருந்தால், செயல்கள் பெரிதாக இருக்கும். செயல்கள் பெரிதாக இருந்தால், வாழ்க்கை உயர்வாகும் என்பதை வள்ளுவர் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி விட்டார். உங்கள் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும். லட்சியத்தை அடைய அறிவாற்றலைப் பெருக்க வேண்டும். அதை அடைய உழைப்பு முக்கியம்.

     உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அத்துடன் விடாமுயற்சி இருந்தால், வெற்றி உங்களை வந்து சேரும். வரலாற்றின் பக்கங்களில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதை உலகம் படிக்க வைப்பது, நமது கையில்தான் உள்ளது. எந்த மாயவலையிலும் விழமாட்டேன் என்ற உறுதி இருந்தால், வரலாற்றுப் பக்கத்தில் நீங்களும் இடம் பிடிப்பீர்கள்.வாழ்வில் வெல்ல 5 விஷயங்கள் அவசியம். முதலில் லட்சியம் வேண்டும். அதை அடையக் கூடிய அறிவைத் தேடிப்பெற வேண்டும். அதற்கு கடும் உழைப்பு வேண்டும். பிரச்னைகளைக் கண்டு பயப்படக் கூடாது. பிரச்னைகளைத் தோல்வியடையச் செய்து, வெற்றியடைய வேண்டும். விடாமுயற்சி வேண்டும்; - அப்துல் கலாம்

Labels: