ஜப்பானிய நீர் சிகிச்சை
மாற்று மருத்துவ முறைகள்: "ஜப்பானிய நீர் சிகிச்சை"
தினமும் அதிகாலையில் துயில் எழுந்தவுடன் பல் துலக்குமுன் ஆறு குவளை (1.26 லிட்டர்) நீர் பருகுவதால், உடலின் உட்புற உறுப்புக்கள் தூய்மையாக்கப்பட்டு, கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன. வெப்பம் குறைந்து, குளிர்ச்சி பெற்று, மலச்சிக்கல் மறைகின்றது. (இதை நம் முன்னோர்கள் 'உஷை பானம்' என்றழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.)
 * தலைவலி
 * இரத்த அழுத்தம்
 * சோகை
 * கீல்வாதம் 
 * பொதுவான பக்கவாதம்
 * ஊளைச்சதை 
 * மூட்டுவலி
 * காதில் இரைச்சல் 
 * இருதயப் படபடப்பு 
 * மயக்கம்
 * இருமல்
 * ஆஸ்த்மா
 * சளி 
 * க்ஷய ரோகம் 
 * மூளைக் காய்ச்சல்
 * கல்லீரல் நோய்கள்
 * சிறுநீரகக் கோளாறுகள் 
 * பித்தக் கோளாறுகள்
 * வாயுக் கோளாறுகள்
 * வயிற்றுப் பொருமல்
 * இரத்தக் கடுப்பு
 * மூலம்
 * மலச்சிக்கல்
 * உதிரப்போக்கு
 * நீரழிவு
 * கண் நோய்கள்
 * கண் சிவப்பு
 * ஒழுங்கில்லாத மாதவிடாய்
 * வெள்ளை படுதல்
 * கர்ப்பப்பை புற்றுநோய் 
 * மார்புப் புற்றுநோய்
 * தொண்டை சம்பந்தமான நோய்கள்
நம்பவே முடியவில்லையே! சந்தேகம் கலந்த ஆச்சரியம் மேலிடுகிறது அல்லவா? இந்த முறை ஜப்பானில் பரவலாகக் கடைப் பிடிக்கப்படுகிறது.
தண்ணீரைக் குடித்தபிறகு, ஒரு மணி நேரத்திற்கு காபி, டீ போன்ற பானங்களையோ, பிஸ்கட், பழம் போன்ற தின்பண்டங்களையோ சாப்பிடக் கூடாது. இது மிக மிக அவசியமானது, முக்கியமானது. இதைக் கவனத்தில் கொண்டு நடைமுறைப் படுத்த வேண்டும்.
காலையில் தண்ணீர் குடிப்பதற்குத் தயாராகும் வகையில், முதல் நாள் இரவுச் சாப்பாட்டை முடித்த பிறகு, படுக்கைக்குச் செல்லுமுன்பு, நரம்பு மண்டலத்தைத் தூண்டக்கூடிய பானங்களையோ, பொருட்களையோ சாப்பிடக்கூடாது. இந்த நிபந்தனையும் முக்கியமானது. இரவே பல் துலக்கிக் கொள்வது நல்லது.
தண்ணீரில் கிருமிகள் கலந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் இருக்குமானால், அதை முதல் நாள் இரவே கொதிக்க வைத்து, ஆற வைத்து வடிகட்டி, பத்திரப் படுத்திக் கொள்ளலாம்.
இம்முறை ஆரம்பத்தில் ஒரு சில நாட்களுக்கு சற்று சிரமமாகத் தோன்றலாம். பின்னர் பழக்கமாகிவிடும்.
மருந்து, மாத்திரை, ஊசி, டாக்டர், பணச் செலவு ஆகிய எதுவுமே இல்லாமல், இம்முறைப்படி நீரைப் பருகுவதால், கீழ்க்கண்ட நோய்கள் குணமாகின்றன:-
சோதனைகள் மூலமாகவும், அனுபவபூர்வமாகவும் கீழ்க்கண்ட நோய்கள் குணமாக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது:-
* மலச்சிக்கல் – ஒரே நாளில்
 * வயிற்றில் பித்தம் மற்றும் வாயுப் பொருமல் – இரண்டு நாட்கள்
 * சர்க்கரை வியாதி – ஏழு நாட்கள் 
 * இரத்த அழுத்தம் – நான்கு வாரங்கள்
 * புற்று நோய் – நான்கு வாரங்கள் 
 * க்ஷயரோகம் – மூன்று மாதங்கள் 
நன்றி: தி ஹெல்த் சர்வீஸ் சொசைடி, கரூர்
Labels: தமிழ்

0 Comments:
Post a Comment
<< Home